ரஜினி மன்றத்தில் பிளவு!
கடலூர் & பாண்டிச்சேரி:
பாமக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது என்ற ரஜினியின் முடிவுக்குபாண்டிச்சேரியில் உள்ள 5 மன்றங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே போல கடலூர் ரஜினி மன்றத்தினர்ரஜினியின் கொடும்பாவியை எரித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
திருக்கனூர் ராகவேந்திரா ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம், கோவிந்தசாலை எழில்வேந்தன் ரஜினிகாந்த் ரசிகர்நற்பணி மன்றம், குமாரப்பாளையம் மீண்டும் மகாத்மா ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம், கூனிச்சசம்பட்டுஅருணாச்சலம் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், திருக்கனூர்பேட் பாட்ஷா ரஜினி ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவர்கள்புதுவை மாநில ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கையில்கூறியுள்ளதாவது,
ரஜினியைப் பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்தது வருத்தத்துக்குரியதுதான். அதற்காக அவரைவிமர்சித்து கருத்துத் தெரிவித்திருக்கலாம்.
அதை விடுத்து ரஜினி ரசிகர் மன்றங்களைத் தேர்தலில் பழித் தீர்க்கும் மன்றங்களாக பயன்படுத்துவதை நாங்கள்கண்டிக்கிறோம். தமிழக மக்களின் நலனுக்காக ரஜினி தனிக்கட்சி தொடங்கினால் உயிரையும் கொடுத்துகட்சிப்பணி ஆற்ற தயாராக இருக்கிறோம்.
காமராஜ் ஆட்சி நடத்துகிறார் புதுவை முதல்வர் ரங்கசாமி. அவர் ஆதரிக்கும் பாமக வேட்பாளர் ராமதாஸின்வெற்றிக்குப் பாடுபடுவோம் என்று கூறியுள்ளனர்.
கொடும்பாவி எரிப்பு:
இந் நிலையில் கடலூர் புதுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் கலையுலக ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினரும்,அண்ணா நகரில் செயல்படும் தமிழக தளபதி ரஜினி மன்றத்தினரும் அதிமுக-பா.ஜ.கவுக்கு ஆதரவு தரும்ரஜினியின் முடிவை எதிர்த்து மன்றங்களைக் கலைப்பதாக அறிவித்துள்ளனர்.
மேலும் உழவர் சந்தை அருகே கூடிய இவர்கள் ரஜினியின் உருவப் பொம்மையையும் எரித்தனர். அதிமுகவைஆதரிக்கும் ரஜினியின் அறிவிப்பு வெளியான இந்த நாள் ஒரு கருப்பு நாள் என அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, இது குறித்து புதுவை மாநில ரஜினிகாந்த் நற்பணி மன்றச் செயலாளர் ரஜினி சங்கர் கூறும்போது,திடீரென்று இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முறையாக மன்றத்தைப் பதிவு செய்யாதவர்கள் இவ்வாறுகூறியுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications