For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகுலின் கன்னிப் பேச்சு கண்களை நனைக்கிறது: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அமேதி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியின் கன்னிப் பேச்சு கண்ணீரை வரவழைக்கிறது என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

முரசொலியில் அவர் எழுதியிருப்பதாவது:

அமேதி தொகுதியில் தனது பிரசாரத்தைத் தொடங்கிய ராகுல் தனது கன்னிப் பேச்சில், அரசியல் எனதுகுடும்பத்தைக் காயப்படுத்தியது. எனது பாட்டியும், தந்தையும் கொல்லப்பட்டார்கள். அவர்கள் வழியில்நாட்டுக்குத் தொண்டாற்றவே நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்.

எங்களது குடும்பத்தைப் பற்றிய பா.ஜ.கவினரின் விமர்சனங்கள் குறித்து எனக்குக் கவலையில்லை. எங்களைஅந்நியர் என்று திட்டினாலும், ஏசினாலும் நாங்கள் இதயப்பூர்வமாக இந்தியர்கள் தான் என்று கூறியுள்ளார்.ஓட்டுக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. இதயங்களை வெல்லவே வந்திருக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.கொன்றாலும் என் இதயம் இந்தியாவுக்காகவே துடிக்கும் என்று அந்த இளைஞர் சொல்லியிருக்கிறார்.

அந்த இளம் நெஞ்சின் கனிவான கன்னிப் பேச்சு என் கண்களில் நீர் முட்ட வைத்துவிட்டது. நேருவின் கொள்ளுப்பேரன் நம் நெஞ்சையள்ளும் பேரனாக அல்லவா அரசியலில் பிரவேசித்திருக்கிறார். அவருக்கு என்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக ஆட்சியில் தமிழுக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கு தரப்பட்ட வந்த தந்தை பெரியார், பாரதியார்விருது, பாரதிதாசன் விருது, திரு.வி.க.விருது, கி.ஆ.பெ. விருது ஆகியவை ஜெயலலிதாவின் ஆட்சியில் கடந்த 2ஆண்டுகளாக யாருக்கும் தரப்படவில்லை.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X