மட்டக்களப்பில் தமிழ் வேட்பாளர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ராஜன் சத்தியமூர்த்திஇன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றது யார் என்று தெரியவில்லை.
வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இலங்கையில் வன்முறைதலைதூக்கியுள்ளது.
மட்டக்களப்பைச் சேர்ந்த ராஜன் சத்தியமூர்த்தியை அவரது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத சிலர் சுட்டனர்.இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றிஇறந்தார்.
மட்டக்களப்பு பகுதியில் கடந்த இரு நாட்களில் நடந்துள்ள மூன்றாவது துப்பாக்கிச் சூடு இது.












Click it and Unblock the Notifications