சேலம் ஆட்சியரை "அசத்திய" அரவாணிகள்
சேலம்:
அரவாணிகளின் அன்புத் தொல்லையிலிருந்து தப்பிக்க முடியாமல் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் சேதுராமச்சந்திரன் சிக்கித் தவித்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 10க்கும் மேற்பட்ட அரவாணிகள் திடீரென்று வந்தனர். ஆட்சியர் சேதுராமச்சந்திரனை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தனர். ஒவ்வொருவர் கையிலும், கேக், இனிப்புகள் இருந்தன. பூமாலைகளும் இருந்தன.
பின்னர் ஆட்சியர் அறைக்குள் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். முகம் முழுவதும் சிரிப்புடன் ஆட்சியரைஅணுகிய அவர்கள், அவருக்கு மாலை போட்டு கைதட்டினர். பின்னர் தங்களது கையில் இருந்த கேக்குள்,இனிப்புகளை ஆட்சியருக்கு ஊட்டி விட முயன்றனர்.
அரவாணிகளின் அதிரடி அன்பால் இன்ப அதிர்ச்சிக்குள்ளான ஆட்சியர் நெளிய ஆரம்பித்தார். எதற்காக இந்தபாராட்டு என்று ஆட்சியர் கேட்டபோது, எங்களுக்கும் வாக்குரிமையை வாங்கிக் கொடுத்துள்ளீர்களே,அதுக்குத்தான் இந்தப் பாராட்டு என்று அரவாணிகள் கூறினர்.