யாழ்பாணத் தமிழர்கள் மட்டக்களப்பை விட்டு வெளியே கருணா மிரட்டல்
கொழும்பு:
மட்டக்களப்பில் உள்ள யாழ்பாணத் தமிழர்கள் உடனடியாக அப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனகருணா தலைமையிலான படை மிரட்டல் விடுத்துள்ளது.
இதனால் அப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
கருணா தலைமையிலான படையினர் ஒலிப் பெருக்கிகள் மூலம் இந்த அறிவிப்புகளை வெளியிட அதை போலீசார்அமைதியாக பார்த்தபடி இருந்தனர். மேலும் துண்டுப் பிரசுரங்களையும் அவர்கள் வீடுகளில் வீசினர்.
அதில், யாழ்பாணத் தமிழர்கள் தான் கிழக்குப் பகுதியின் வளர்ச்சி முடங்கிப் போனதற்கு முக்கியக் காரணம்.இதனால் அவர்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்குள் (நேற்றிரவு) இப் பகுதியை விட்டு வெளியேறவேண்டும்.
யாரும் தங்களது அசையும் சொதுக்களை உடன் எடுத்துச் செல்லக் கூடாது. அதிகபட்சமாக ரூ. 500யை மட்டும்எடுத்துக் கொண்டு வெளியே வேண்டும். உங்களது அசையா சொத்துக்கள் இனி உங்களுக்குச் சொந்தமானவைஅல்ல.
வெளியே மறுப்பவர்கள் இளைய தலைமுறையோடு சேர்த்து அடியோடு ஒழித்துக் கட்டப்படுவார்கள் என்று அதில்மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் கடைகளை மூடிய கருணாவின் தலைமையிலான படையினர் அவற்றின் சாவிகளையும் எடுத்துச்சென்றுவிட்டனர். கடைகளை விட்டுவிட்டு வியாபாரிகளும் வெளியே வேண்டும் என அவர்கள்உத்தரவிட்டுள்ளனர்.
இதனால் அங்கு பெரும் அச்சமும், பதற்றம் நிவவுகிறது. இந்த மிரட்டலுக்கு அஞ்சி எத்தனை குடும்பங்கள்வெளியேறின என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
இந் நிலையில் கருணாவின் படைகளை ஒடுக்க விடுதல்ை புலிகளின் கமாண்டோ படைகள் கிழக்குப் பகுதிகளில்ஊடுருவி வருவதாகவும் செய்திகள் வருகின்றன.












Click it and Unblock the Notifications