ரூ 1 கோடியில் புதுப்பிக்கப்படும் மதுரை மஹால்
மதுரை:
மதுரையில் உள்ள புகழ் பெற்ற திருமலை நாயக்கர் மஹால் ரூ. 1 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருவதாகமாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கும் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுப்பணித்துறைமற்றும் தொல்பொருள் துறை நிபுணர்களின் உரிய ஆய்வுக்குப் பின்னரே புதுப்பிக்கும் பணிகள்தொடங்கப்பட்டுள்ளன.
2 கட்டமாக புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 400 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்தக் கட்டடத்தின் பலபகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. சிறப்பு தொழில் நுட்பம் மூலம் இந்த விரிசல்கள் சரி செய்யப்பட்டுவருகின்றன. சுவர்களை பலப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்கூரைகளுக்கு வர்ணம் பூசுவதும் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்படும். புதுப்பிக்கும் பணிகளைமுன்னிட்டு மார்ச் 27ம் தேதி முதல் பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.