தேர்தல் பாதுகாப்பு: அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை
சென்னை:
தமிழகத்துக்கு பிரசாரம் செய்யும் வர இருக்கும் அகில இந்திய தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது பற்றிகாவல் துறை உயர் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா உள்பட பல முக்கிய பிரமுகர்கள் தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்யவருகிறார்கள்.
அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு பற்றி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக போலீஸ்டி.ஜி.பி. கோவிந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மத்திய உளவு பிரிவு சிறப்பு இயக்குனர் நரசிம்மன், இணை இயக்குனர் எஸ்.ஏ.குப்தா, கறுப்புபூனைப்படை ஐ.ஜி. அனில்சிங், தொழில்நுட்ப இயக்குனர் வி.கே.சக்சேனா.
தமிழக கூடுதல் டி.ஜி.பி. வெங்கடகிருஷ்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜ், மதுரை, திருச்சி, நெல்லை,சேலம், கோவை மாநகர போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட போலீஸ் துறை உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில்கலந்து கொண்டனர்.
காலை 10 மணிக்கு முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற கூட்டத்தில் பிரசாரத்துக்கு வரும் தலைவர்களுக்குபாதுகாப்பு கொடுப்பது பற்றியும், பதட்டமான சூழ்நிலை எங்கெங்கு ஏற்படும் அந்த பகுதிகளுக்கு போலீஸ்பாதுகாப்பு கூடுதலாக அனுப்புவது பற்றியும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டி.ஜி.பி. கோவிந்த் கூறியதாவது:
தேர்தல் பாதுகாப்புக்கு 65 கம்பெனி மத்திய போலீஸார் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். ஒவ்வொரு கம்பெனியிலும்90 போலீசார் வீதம் இருப்பார்கள்.
25 தொகுதிகளில் சில இடங்கள் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப்படுவார்கள்.- தமிழ்நாட்டுக்கு வரும் முக்கிய தலைவர்களுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதுவும்கிடையாது.
தேர்தல் பிரசாரத்துக்கு அகில இந்திய பிரமுகர்கள் எப்போது வருவார்கள் என்று இன்னும் தேதிஅறிவிக்கப்படவில்லை. எப்போது வந்தாலும் பாதுகாப்பு கொடுக்க தயார் நிலையில் உள்ளோம். முக்கியபிரமுகர்கள் 13 பேர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க இருக்கிறோம். அவர்கள் தங்கும் இடங்களுக்குக்கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications