உலகிலேயே உயரமான பாம்பு சிலை!
காஞ்சிபுரம்:
உலகிலேயே உயரமான ஏழு தலை கொண்ட பாம்பு சிலை காஞ்சிபுரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் அருகே ராமஹள்ளி என்ற இடத்தில் சுப்புரமணியா கோவில் உள்ளது. இந்தக் கோவிலில்வைக்கப்படுவதற்காக இந்த பாம்பு சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12ம் தேதி கோவில் வளாகத்தில் இந்தசிலை நிறுவப்படவுள்ளது.
காஞ்சிபுரத்தில் தற்போது இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 16 அடியாகும். 45 டன் எடையுடன்கூடியதாக சிலை உள்ளது. சிலையை வடிவமைக்க ஒன்றரை வருடம் ஆகியுள்ளது.
இன்று இந்த சிலைக்கு காஞ்சி சங்கராச்சாரியார் சிறப்புப் பூஜை செய்யவுள்ளார். அதன் பின்னர் சிலை டிரெய்லர்லாரி மூலம் ராமஹள்ளிக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
சிங்கப்பூரில் ஒரு கோவிலில் 5 அடி உயர பாம்பு சிலை உள்ளது. இதுதான் தற்போதைக்கு உலகிலேயே உயரமானபாம்பு சிலையாகும். ஆனால் அதை தற்போது காஞ்சிபுரம் சிலை முந்தி விட்டது.