தமிழக அரசின் அவதூறு வழக்கு: கர்நாடக காங். தலைவருக்கு சம்மன்
சென்னை:
தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்வீரபத்ரப்பாவுக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தமிழ் நாளிதழ் ஒன்றில் வீரபத்ரப்பாவின் பேட்டி வெளியாகியிருந்தது.அதில், நாகப்பா (வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் கர்நாடக அமைச்சர்) சாவுக்கு ஜெயலலிதாதான்காரணம் என்று வீரபத்ரப்பா தெரிவித்திருந்ததாக செய்தி வெளியாகியிருந்தது.
இந்த செய்தி, முதல்வர் ஜெயலலிதாவையும், அவரது ஆட்சியையும் கொச்சைப்படுத்துவதாகவும், அவதூறைஏற்படுத்தும் நோக்கில் பேட்டி கொடுத்திருந்ததாகவும் கூறி வீரபத்ரப்பா மீது சென்னை முதன்மை செஷன்ஸ்நீதிமன்றத்தில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏப்ரல் 16ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறிவீரபத்ரப்பாவுக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.