For Daily Alerts
Just In
தஞ்சை: கேரள மாணவ-மாணவிகள் 27 பேருக்கு வாந்தி, மயக்கம்
தஞ்சாவூர்:
தமிழகத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட கேரள மாணவ- மாணவிகள் 27 பேருக்கு வாந்தி- மயக்கம்ஏற்பட்டது.
கேரள மாநிலம் மூணாறில் உள்ள செயிண்ட் மேரீஸ் அப்பர் பள்ளியில் இருந்து மாணவ- மாணவியர்கள்வேளாங்கண்ணிக்குச் சுற்றுலா வந்தனர். பூண்டியில் உள்ள மாதா கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தபின்,பள்ளி நிர்வாகத்தினர் தந்த சாப்பாட்டு பார்சல்களை சாப்பிட்டனர்.
பின்னர் தஞ்சைக்குச் சென்று அங்குள்ள மராட்டிய தர்பார் அரண்மனையைச் சுற்றிப் பார்த்தனர். அப்போது 27மாணவ-மாணவியிருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள் தஞ்சை ராசா அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை போலீஸ் துணை கண்காணிப்பாளர் உமா மருத்துவமனைக்கு வந்து விசாரணைமேற்கொண்டார். சிகிச்சைக்குக்குப்பின் மாணவ- மாணவியர் சுற்றுலாவைத் தொடர்ந்தனர்.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Wednesday, March 31, 2004, 5:30 [IST]