கேட்காமலேயே கிடைத்த ரஜினி ஆதரவு: பா.ஜ.க
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த்தின் ஆதரவை பாரதிய ஜனதாக் கட்சி கேட்கவில்லை. அவர்களாகவே ஆதரவுதெரிவித்துள்ளனர். அதற்காக ரஜினியையும், அவரது ரசிகர்களையும் பாராட்டுகிறேன் என்று பா.ஜ.க. தலைவர்வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
இன்று சென்னை வந்த நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், பாரதிய ஜனதாக் கூட்டணிக்கு 6 தொகுதிகளில்ரஜினி ரசிகர்கள் ஆதரவு அளிக்க டிவு செய்துள்ளனர். இதற்காக அவர்களை நான் பாராட்டுகிறேன். இருப்பினும்பாஜக யாருடைய ஆதரவையும் இதுவரை கோரவில்லை. அவர்களாகவே ஆதரவு அளித்துள்ளார்கள். இதுபாராட்டுக்குரியது.
முரசொலி மாறன் மறைந்த பிறகு, சென்னை வந்து நான் கருணாநிதியை சந்தித்தபோது, தயாநிதி மாறனைஅமைச்சராக்குவது தொடர்பாக கட்சியினருடன் விவாதித்து தெரிவிப்பதாக என்னிடம் கருணாநிதி கூறினார்.
ஆனால், பிரதமருடன் அவர் என்ன பேசினார் என்பது குறித்து எனக்குத் தெரியாது.
இந்தியாவின் பிரதமர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். வெளிநாட்டுக்காரர் வேண்டுமா, இந்தியர்வேண்டுமா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் வெங்கையா.
இதற்கு முன்னதாக மதிமுக மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் நரசிம்மன், இசையமைப்பாளர் ஆதித்யன்,விவசாய அணிச் செயலாளர் நாகராஜ் உட்பட பலர் வெங்கைய்யா நாயுடு முன்னிலையில் பா.ஜ.கவில் சேர்ந்தனர்.சென்னை லப்பை ஜமாத் தலைவர் இஸ்மாயில் தலைமையில் 100க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் பா.ஜ.க.தலைமையகமான கமலாலயத்துக்கு வந்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications