திமுகவுக்கு எங்கள் பலத்தைக் காட்டுவோம்: திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை:

திமுகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் எங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டும் வகையில் தான் 3வதுஅணியை உருவாக்கியுள்ளோம் என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறினார்.

திருவண்ணாமலையில் அக் கட்சியின் தேர்தல் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

ஜாதி அரசியல் நடத்தி வருகிறார் ராமதாஸ். ஜாதி சங்கங்களை வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் அவர்,விடுதலைச் சிறுத்தைகளை ஜாதிக் கட்சி என்று விமர்சிக்கிறார்.

வட மாவட்டங்களில் தேர்தலின்போது பெரும் வன்முறையை உருவாக்கவும், கலவரத்தை ஏற்படுத்தவும்பாமகவினர் திட்டமிட்டுள்ளனர். எனவே வட மாவட்ட தொகுதிகளில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனமாகஇருக்க வேண்டும்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகளும் முக்கிய காரணம்.எங்களது ஓட்டு வங்கியால்தான் அவர்களால் அதிக இடங்களில் வெற்றி பெற முடிந்தது. இதை கருணாநிதியேஒப்புக் கொண்டுள்ளார்.

அதிமுகவுக்கு ஆதரவாகவே எங்களதுகூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறுவதில் உண்மை இல்லை.எங்களது பலத்தை திமுகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் நிரூபித்துக் காட்டும் முகமாகவே 3வது அணியைஉருவாக்கியுள்ளோம் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+