ஊழியர்களின் ஓய்வூதியத்தில் கை வைத்த தமிழக அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் தமிழக அரசு கை வைத்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், ஊக்கத் தொகை, கிராஜுவிட்டி ஆகியவை ரத்துசெய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தையும் அறசு ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பணியில்சேர்ந்தவர்களுக்கு தற்போது அமலில் உள்ள ஓய்வூதிய முறை ரத்து செய்யப்படுகிறது. அதற்குப் பதில், அவர்களதுசம்பளத்தில் இருந்து ஓய்வூதியத்துக்கான பணமும் பிடித்தம் செய்யப்படும். அது தான் பின்னர் ஓய்வூதியமாகவழங்கப்படும்.
இந்த ஓய்வூதிய முறை தனியார் பள்ளி ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications