பார்த்திபன்-சீதாவுக்கு விவகாரத்து கிடைத்தது
சென்னை:
இயக்குனர் பார்த்திபன், நடிகை சீதாவுக்கு சென்னை குடும்ப நீதிமன்றம் விவகாரத்து வழங்கியது.
புதிய பாதை மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமான பார்த்திபன் தனது முதல் பட நாயகியானசீதாவைக் காதலித்து கரம் பிடித்தார். அவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
மூன்றாவதாக ராதாகிருஷ்ணன் என்ற குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
13 வருட தாம்பத்ய வாழ்க்கை கசந்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு சில மாதங்களுக்கு முன் பிரிந்தனர்.விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்திலும் மனு செய்தனர்.
6 மாதம் கழித்து இருவரையும் மீண்டும் நீதிமன்றத்திற்கு வருமாறு நீதிபதி ராஜசூர்யா உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இதையடுத்து பார்த்திபன், சீதாவுக்கு விவாகரத்து வழங்கிய நீதிபதி, இரு குழந்தைகளில் ஒன்றை பார்த்திபனும்,இன்னொன்றை சீதாவும் வளர்க்கலாம் என்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கீர்த்தனாவும் ராதாகிருஷ்ணனும் பார்த்திபனுடன் இருப்பது என்றும், அபிநயா, சீதாவுடன்இருப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீர்ப்பின்போது பார்த்திபன் முகத்தில் சலனம் காட்டாமல் இருந்தார். சீதா மட்டும் கண்கள் கலங்கியவாறுகாணப்பட்டார்.












Click it and Unblock the Notifications