கருத்துக் கணிப்புகளை மீண்டும் பொய்யாகுவார் ஜெயலலிதா: சொல்கிறார் வெங்கையா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

தேர்தல் கருத்துக் கணிப்புகளை மூன்று முறை பொய்யாக்கிய ஜெயலலிதா, இந்த முறையும் அவற்றைபொய்யாக்கி வெல்வார் என பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

தேசிய அளவில் பா.ஜ.க கூட்டணி வென்றாலும் தமிழகத்தில் திமுக கூட்டணி தான் வெல்லும்,அதிமுக-பா.ஜ.க. கூட்டணி படு தோல்வி அடையும் என என்.டி.டி.வி. கருத்துக் கணிப்புவெளியிட்டுள்ளது.

இந் நிலையில் இன்று பெங்களூரில் நிருபர்களைச் சந்தித்த நாயுடுவிடம் இந்தக் கருத்துக் கணிப்புக்குறித்துக் கேட்டபோது,

காங்கிரஸ் படுமோசமான நிலையில் உள்ளது. பா.ஜ.க. மட்டுமே 272 இடங்களைக் கட்டாயம்பிடிக்கும். அதே போல தமிழகத்திலும் அதிமுக-பா.ஜ.க. கூட்டணியே வெல்லும்.

3 முறை தேர்தல் கருத்துக் கணிப்புகளையும், 2 முறை தேர்தலுக்குப் பின் நடந்த எஸ்சிட் போல்முடிவுகளையும் பொய்யாக்கியவர் ஜெயலலிதா. இந்த முறையும் அவருக்கு தமிழகத்தில் பெரும்கூட்டம் கடபகிறது. இதனால் கடந்த முறையை விட இந்த முறை அதிமுகவும் பா.ஜ.கவும் நிறையஇடங்களில் வெல்லும் என்றார் நாயுடு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+