பா.ஜ.க. வேட்பாளருக்கு ஜால்ரா: புதுவை தேர்தல் அதிகாரி அதிரடி இடமாற்றம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி பா.ஜ.க. வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்தை அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்து வைத்த சர்ச்சைகாரணமாக, அம் மாநில தேர்தல் அதிகாரி ஜேசன் சாமியை தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்திஅதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் புதுவை துணை நிலை ஆளுநர் என்.என்.ஜா அரசு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில்புதுவை பாஜக வேட்பாளர் லலிதா குமாரமங்கலமும் கலந்து கொண்டார்.
அப்போது விருந்துக்கு வந்திருந்த அதிகாரிகளிடம், லலிதா குமாரமங்கலத்தை ஆளுநரின் செயலாளரும், மாநிலதலைமைத் தேர்தல் அதிகாரியுமான ஜேசன் சாமி அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும் தான் ஒரு தேர்தல் அதிகாரி என்பதை மறந்துவிட்டு பா.ஜ.க. வேட்பாளரிடம் அதீதமானபவ்யம் காட்டினார். ஆளுநர் என்.என். ஜா, பா.ஜ.வைச் சேர்ந்தவர் என்பதால் அவரிடம் நல்லபெயர் வாங்குவதற்காக பா.ஜ.க. வேட்பாளர் லலிதாவுக்கு ஓவராக ஜால்ரா போட்டார்.
இந்த விவகாரம் பாண்டிச்சேரியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. வேட்பாளரை அரசுவிருந்துக்கு அழைத்த ஆளுநர் ஜாவை உடனடியாக மாற்ற வேண்டும், அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சினையைக் கிளப்பியுள்ளன.
இந் நிலையில் ஆளுநருடன் சேர்ந்து கொண்டு அம் மாநில பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிஜேசன் சாமியும் செயல்படுகிறார் என்றும் தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் பறந்தன.
இதையடுத்து விசாரணை நடத்தி தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, விதியை மீறி நடந்த ஜேசன்சாமியை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார். அவருக்குப் பதில் புதுவை மாநில கல்வித்துறைச் செயலாளர்சத்யவதியை புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கோரிக்கை:
இந் நிலையில் விதிமுறைகளை மீறி பா.ஜ.க. வேட்பாளர் லலலிதா குமாரமங்கலத்தை அரசு விருந்துக்கு அழைத்துஅதிகாரிகளுக்கு அறிகப்படுத்திய புதுவை துணை நிலை ஆளுநர் என்.என். ஜாவை மாற்ற வேண்டும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆளுநரோடு சேர்த்து மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரையும் உடனடியாகஇடமாற்றம் செய்ய வேண்டும் என்று அக் கட்சியின் மாநிலச் செயலாளர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.