நாகர்கோவிலில் ராமதாஸை அதிர வைத்த போஸ்டர்கள்!
நாகர்கோவில்:
நாகர்கோவிலிக்கு வருகை தந்த பாமக தலைவர் டாக்டர் ராமதாஸை கண்டித்து நகரின் பல பகுதிகளிலும்ஒட்டப்பட்டிருந்த ரஜினி மன்ற சுவெராட்டிகளால் ராமதாஸ் கடும் அதிர்ச்சியுற்றார்.
நேற்று நாகர்கோவிலுக்கு பிரச்சாரத்துக்கு வந்தார் ராமதாஸ். அவரது வருகையைக் கண்டித்தும், ரஜினி குறித்துபேசியதற்கு மன்னிப்பு கேட்கக் கோரியும், அவர் சென்ற வழியெங்கும் கண்டன சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்ரசிகர்கள்.
ரயில் நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு காரில் சென்ற ராமதாஸ் வழியெங்கும் ஒட்டப்பட்டிருந்தசுவரொட்டிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் மூட் அவுட் ஆன நிலையிலேயே ராமதாஸ் பிரச்சாரம்செய்ததைப் பார்க்க முடிந்தது.
நாகர்கோவிலில் பாமகவுக்கு தொண்டர்கள் பலம் இல்லாததால், இருந்த சொற்ப தொண்டர்கள், சுவரொட்டிகளைகிழித்துப் போட்டனர். இருப்பினும் ரஜினி ரசிகர்கள் திரண்டு விட்டால் ஆபத்து என்று உணர்ந்து சுவரொட்டிகளைஅதிகம் கிழிக்காமல் விட்டு விட்டனர். அதே நேரம் வட மாவட்டமாக இருந்திருந்தால் போஸ்டர் ஒட்டியவர்களைபா.ம.கவினர் பதம் பார்த்திருப்பார்கள்.












Click it and Unblock the Notifications