For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாடு விடுதலைப் படையை சேர்ந்த 2 பேர் கைது: வீரப்பனின் கூட்டாளிகள்

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்:

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பட்டா கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில்வீரப்பனுடன் தொடர்புடைய தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப் பகுதியில் தமிழக அதிரடிப் படையினரிடம் நேற்றிரவுஇவர்கள் சிக்கினர். தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சத்தியமங்கலம் பஸ்நிலையத்தின் அருகே காட்டுப் பகுதியில் அதிரடிப்படை கண்காணிப்பில் ஈடுபட்டது.

அப்போது அங்கு வந்த கொளஞ்சி, முத்துக்குமார் ஆகியோரை அதிரடிப் படை போலீசார் துப்பாக்கிமுனையில் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். இருவரும் தமிழ்நாடு விடுதலைப் படையைச்சேர்ந்தவர்கள் என்று போலீசார் கூறுகின்றனர்.

கடலூரைச் சேர்ந்த இந்த இருவர் மீதும் மயிலாடுதுறையில் கொள்ளை அடித்தது உள்பட பல்வேறுவழக்குகள் இருப்பதாகவும், காட்டுப் பகுதியில் மறைந்து தங்களிடம் இருந்து தப்பி வந்ததாகவும்போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி நாகப்பா அவரது வீட்டிலிருந்து கடத்தப்பட்டார். டிசம்பர்மாதத்தில் அவரது உடல் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

இவரைக் கடத்தியதிலும் நடிகர் ராஜ்குமாரைக் கடத்தியதிலும் தமிழ்நாடு விடுதலைப் படைவீரப்பனுக்கு உறுதுணையாக இருந்தாக அதிரடிப்படை போலீசார் கூறுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X