விதிகளை மீறி வரைந்து தள்ளும் கட்சிகள்!
சென்னை:
அரசு அலுவலக சுவர்களில் பிரசார விளம்பரங்கள் இடம் பெறக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கண்டிப்பாககூறியுள்ள நிலையிலும் பல்வேறு இடங்களில் அரசு சுவர்களை அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் இன்னும்ஆக்கிரமித்த வண்ணம்தான் உள்ளன.
அரசு சுவர்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என்று தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் அதிகாரிசாரங்கியும் கேட்டுக் கொண்டுள்ளனர். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந் நிலையில், தடையை மீறி தொடர்ந்து அரசு சுவர்களை அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள்அலங்கரிக்கின்றன. சென்னையில் பல்வேறு அலுவலக சுவர்களில் தொடர்ந்து விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.மாநகராட்சி அலுவலக சுவர்களில் அதிமுக, பா.ஜ.க. விளம்பரங்கள் அதிகம் காணப்படுகின்றன. அதேபோல,திமுகவின் விளம்பரங்களும் குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன.
இதேபோல, சேலம் நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளின் சுவர்களிலும் திமுக, அதிமுக வேட்பாளர்கள்தங்களது விளம்பரங்களை சரமாரியாக வரைந்து தள்ளியுள்ளனர். இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்குகுடியிருப்பாளர்கள் புகார் கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.