சென்னையில் வாஜ்பாயுடன் கூட்டு பிரசாரம்: ஜெ.
சென்னை:
ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு,இன்று சென்னை வந்த பிரதமர் வாஜ்பாயை முதல்வர் ஜெயலலிதா விமான நிலையத்தில் வரவேற்றார்.
வாஜ்பாய் சென்னை விமான நிலையத்துக்கு இன்று பிற்பகல் வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழகபா.ஜ.க சார்பிலும், அதிமுக சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை முதல்வர் ஜெயலலிதா,மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், பா.ஜ.க. தலைவர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
நெல்லூர் செல்லும் முன் நிருபர்களுக்குப் பேட்டியளித்த வாஜ்பாய்,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்பது பிரச்சனைக்குரிய விஷயமாகும். நாடு முழுவதும்இது பற்றிய விவாதம் நடைபெற்று வருகிறது. நாட்டின் முன்னேற்றத்தில்தான் எங்களுக்கு அக்கறை என்றாலும்,இது போன்ற விஷயங்களை ஒதுக்க முடியாது
ஜெயலலிதாவுடன் இணைந்து பிரசாரம் செய்வதில் ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.
பின்னர் பேசிய ஜெயலலிதா, சேர்ந்து பிரசாரம் செய்வது குறித்து விவாதித்து வருகிறோம். விரைவில் சென்னையில்மிகப் பெரிய பிரசார கூட்டம் நடைபெறும் என்றார்.
பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம் வாஜ்பாய் நெல்லூர் புறப்பட்டு சென்றார். நெல்லூரிலிருந்து மாலை 6.05-க்குச்சென்னை வருகிறார்.
மாலை 6.15-க்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். வாஜ்பாய் வருகையையொட்டி சென்னை விமானநிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications