For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தை தமிழ் மகன்தான் ஆள வேண்டும்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தை தமிழ் அறிந்த தமிழ் மகன்தான் ஆள வேண்டும் என்று பாவேந்தர் பாரதிதாசன் கூறியிருப்பதை ஜெயலலிதாநினைவில் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களான ப.சிதம்பரம், என்.எஸ்.வி.சித்தன், தங்கபாலு ஆகியோர் இன்று கோபாலபுரம் சென்றுகருணாநிதியை சந்தித்தனர்.

பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவை இந்தியர்கள்தான ஆள வேண்டும், மற்றவர்கள் வெளியேறவேண்டும் என்று ஜெயலலிதா கூறி வருகிறார். பாவேந்தர் பாரதிதாசன் தனது பாடலில் தமிழ் அறிந்த தமிழ் மகன்தான் தமிழகத்தைஆள வேண்டும் என்று கூறியுள்ளதை ஜெயலலிதாவுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஐந்தரை ஆண்டு கால ஆட்சியில் மக்களிடம் சொல்லிக் கொள்ளும்படி ஒரு சாதனையும்இல்லை. அதனால்தான் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்று கூறி பாஜகவினர் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதை மக்கள்ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

தமிழ்நாட்டை தமிழ் மகன் தான் ஆள வேண்டும் என்ற கருத்தை ஜெயலலிதாவோடு ரஜினிக்கும் சேர்த்தே கருணாநிதிகூறியிருப்பதாகக் கருதப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X