ராபின் மெயின் மோசடி: காளிமுத்துவை பதவி நீக்கக் கோரி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராபின் மெயின் மோசடி வழக்கில் தொடர்புள்ள சபாநாயகர் காளிமுத்து, அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என்றுகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்கியதாக கேரளாவைச் சேர்ந்த ராபின் மெயின் என்பவர் மீது கடந்த 20ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது. சிபிஐ இந்த வழக்கை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சபாநாயகர்காளிமுத்துவும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கிலிருந்து சபாநாயகர் காளிமுத்துவை சிபிஐ நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. ஆனால் இதை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வழக்குவிசாரணைக்கு காளிமுத்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந் நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துராமன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல்செய்துள்ளார். அதில், ராபின் மெயின் வழக்கில் காளிமுத்து மீண்டும் சேர்க்கப்பட்டிருப்பதால் அவர் வகித்து வரும்சபாநாயகர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் இது ஒரு தவறான முன்னுதாரணத்தைஏற்படுத்தி விடும் என்று கோரியுள்ளார்.

இந்த மனு மீது நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+