நாளை அனைத்துக் கட்சிகளுடன் சாரங்கி ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி நாளை சென்னையில்ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் மே மாதம் 10ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல்வருகிற 16ம் தேதி தொடங்குகிறது. இந் நிலையில் சென்னையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமைத்தேர்தல் அதிகாரி சாரங்கி ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாளை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில்அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, தேர்தல் ஏற்பாடுகள், வாக்குச் சாவடிகள் குறித்த விவரங்கள்,வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை தாக்கல் செய்வது தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications