கோவையை கலக்கிய கன மழை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை நகரில் இன்று காலை சுமார் 3 மணி நேரம் பெய்த கன மழையால் கோவை நகரமே குளுகுளுவானது.
தமிழகமெங்கும் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. ஆனால் சில பகுதிகளில் லேசானது முதல் கனமான மழைபெய்து வருவதால் வெம்மை குறைந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
இந் நிலையில் இன்று காலை ஏழரை மணி முதல் சுமார் 3 மணி நேரம் வரை கோவை மற்றும் அதைச்சுற்றியுள்ளபகுதிகளில் கன மழை பெய்தது. மழை காரணமாக நகரின் பல பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போலஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை தேக்கமடைந்தது.
இதேபோல, ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக கோவை,ஈரோடு மாவட்டங்களில் நிலவி வந்த கடுமையான வெப்பம் குறைந்து குளுமை நிலவுகிறது.












Click it and Unblock the Notifications