மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
டெல்லி:
மதுரையில் உயர் நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டுமனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ்குமார், உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையைத் தொடங்குவதற்குசட்டரீதியாக அங்கீகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு அங்குதள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது சுரேஷ்குமார் சார்பில், மூத்த வழக்கறிஞர் அனில் திவாண் ஆஜரானார். உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அமைப்பது தொடர்பாக 1995 மற்றும் 2000-ல் உயர் நீதிமன்றத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டதைத் தவிர, கிளை துவக்குவதற்கு சட்டரீதியான எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை.
சட்ட வடிவம் இல்லாமல் உயர்நீதிமன்றக் கிளை அமைக்க முடியாது. ஆனால் வரும் 13-ம் தேதி கிளைதிறக்கப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது என்று அவர் வாதிட்டார்.
இதனையடுத்து, பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறி நீதிபதிவரியவா தலைமையிலான பெஞ்ச் மனுவைத் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றக் கிளை அமைப்பது தொடர்பாககுடியரசுத் தலைவர் அறிவிப்பு செய்தாலோ, நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டாலோ அதைஎதிர்த்து வழக்குத் தொடரலாம் என்று மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications