சாக்கடையில் முதலை... பீதியில் திருச்சி
டெல்லி:
திருச்சியில் பாதாளச் சாக்கடையில் முதலை ஒன்று பிடிபட்டது. இதனால் மக்களிடையே பீதி பரவியுள்ளது.
இன்று காலை திருச்சியின் மையப் பகுதியில் பாதாளச் சாக்கடையில் முதலை இருப்பதை பொதுமக்கள் பார்த்தனர்.அதிர்ச்சியடைந்த அவர்கள் தீயணைப்புப் படையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து போராடி அந்த முதலையைப் பிடித்தனர். பின்னர் அந்த முதலை வனத்துறையினரிடம்ஒப்படைக்கப்பட்டது.
கர்நாடக அரசின் பிடிவாதத்தாலும், பருவ மழை பொய்த்ததாலும் காவிரி ஆறு நீர் இல்லாமல் வறண்டுள்ளதால்,நீர் நிலைகளைத் தேடி ஆற்றில் வாழும் உயிரினங்கள் சாக்கடை கால்வாய்கள் வழியாக நகருக்குள்புகுந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக திருச்சி நகரும், அதன் சுற்றுப்புற பகுதிகளும் கடுமையான வெயில் கொடுமையில் தகித்துவருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications