விபச்சார வழக்கில் நடிகை வினிதா விடுதலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விபச்சார வழக்கில் கைதான நடிகை வினிதா, அவரது தாயார் லட்சுமி, தம்பி சங்கர் ஆகியோரை விடுதலை செய்துசென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், விபச்சாரம் செய்ததாகக் கூறி வினிதா, லட்சுமி, சங்கர் உள்ளிட்ட 8 பேரை சென்னைபோலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது சென்னை எழும்பூர் 10-வது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, எந்தவித ஆதாரமும் இல்லாததால், வினிதா, லட்சுமி, சங்கர்ஆகியோரை விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். விபச்சார தடுப்பு வழக்குகளின்போது கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகளை போலீஸார் சரிவர கடைப்பிடிக்கவில்லை என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
விபச்சார வழக்கில் கைதான திரைப்பட நடிகைகளில் வழக்கிலிருந்து விடுதலையான முதல் நடிகை வினிதாதான்என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications