சென்னையில் வாக்காளர்கள் நீக்கம்: சரிபார்க்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதியில் ஒரே பகுதியில் 876 வாக்குகளை நீக்கியது குறித்து ஒருவாரத்திற்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்குசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவல்லிக்கேணி வால்ஸ் சாலையில் 876 வாக்காளர்கள் திடீரென்று நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்துதிருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி உறுப்பினர் எஸ்.ஏ.எம்.உசேன் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும்,மாநகராட்சி தேர்தல் அதிகாரிக்கும் புகார் மனுக்களை அனுப்பினார்.
ஆனால் இந்த புகார்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி,நீதிபதி தணிகாச்சலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், உசேன் புகார் குறித்து ஒரு வாரத்திற்குள் விசாரித்துநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது.