பாமக தொகுதிகளுக்கு கூடுதல் படைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாடாளுமன்றத் தேர்தலின்போது பாமக போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சனைகள் அதிகம் இருக்கும் என்றுஎதிர்பார்க்கும் மாநில தேர்தல் ஆணையம் இந்த 7 தொகுதிகளிலும் கூடுதல் மத்தியப் படைப் போலீஸாரைபாதுகாப்புக்கு அனுப்புமாறு உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் பதட்டம் நிறைந்த தொகுதிகளாக 25 தொகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றில் சில குறிப்பிட்டதொகுதிகளுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக துணை ராணுவத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை, கோவை, தர்மபுரி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, விழுப்புரம், கடலூர், தேனி, பெரம்பலூர்ஆகிய மாவட்டங்களில் துணை ராணுவம் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்புகளின்செயல்பாடுகள் உள்ள தர்மபுரி, கடலூர், -ஜெயங்கொண்டம் பகுதிகளில் கூடுதல் படை அனுப்பவும்தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

இதில் விழுப்புரம், தர்மபுரி, கடலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் பாமக செல்வாக்கு பெற்றபகுதிகள், மேலும் சாதிக்கலவரம் நடந்த தென் மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தவும்திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் தமிழ்நாட்டில் தேர்தல் பாதுகாப்புக்காக 65 கம்பெனி மத்திய படையை அனுப்ப மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது. மத்திய ஆயுதப் படை 25 கம்பெனிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை 25 கம்பெனிகள்,எல்லை பாதுகாப்புப் படை 15 கம்பெனிகள் ஆகியவை தமிழகத்துக்கு வரவுள்ளன.

மேலும் 10 கம்பெனி துணை ராணுவப் படையை அனுப்பும்படி மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் மூலம்கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. துணை ராணுவத்தை அனுப்ப முடியாத பட்சத்தில் அண்டை மாநிலங்களில்இருந்து காவல் படையை அனுப்பும்படி தேர்தல் ஆணையம் கோரியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+