ராமதாஸ் - டென்ஷன், டென்ஷன், டென்ஷன் !
திருச்சி:
ரஜினி ரசிகர்களுக்கும், அவர்கள் என்னைத் திட்டி ஒட்டும் சுவரொட்டிகள் குறித்து செய்தி வெளியிடுவதிலும்பத்திரிக்கைகள் தேவையில்லாமல் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்று பாமக நிறுவனர் ராமதாஸ்பொருமியுள்ளார்.
ரஜினி ரசிகர்கள் ராமதாஸுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளனர்.
மதுரை சம்பவத்திற்குப் பிறகு பத்திரிக்கையாளர்களைப் பார்த்தால் படு கடுப்பாகி விடுகிறார் ராமதாஸ். எதற்காகரஜினி ரசிகர்களுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? அவர்கள் என்ன சொன்னாலும் பெரிதாகபோடுகிறீர்கள்.
என்னைப் பற்றி தாறுமாறான வார்த்தைகளால் போஸ்டர்கள் ஒட்டினால் அதை படம் பிடித்து பெரிதாகவெளியிடுகிறீர்கள். எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது ரஜினிதான் உங்களுக்கு முக்கியமாகப் போய்விட்டதா? என்று ஆவேசமாக கேட்கிறார் ராமதாஸ்.
பத்திரிக்கையாளர்களைக் கண்டால் பாகற்காயை பச்சையாகத் தின்றது போல முக பாவம் காட்டும் டாக்டர்ராமதாஸ், ரஜினி விவகாரத்திற்குப் பிறகு இன்னும் அதிகமாக கோபத்துடன் இருக்கிறார்.