பாண்டிச்சேரி: கூட்டம் சேராததால் பேச்சை சுருக்கிய ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஒழிக்க அதிமும, பாஜகவால் மட்டுமே முடியும். எனவே 40தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர்ஜெயலலிதா கூறினார்.

முன்னதாக பாண்டிச்சேரியில் பொதுக் கூட்டத்தில் பேசச் சென்ற ஜெயலலிதா, அங்கு கூடியிருந்த கூட்டத்தைபார்த்து அப்செட் ஆனார். பாதி மைதானம் காலியாகக் கிடந்ததால் பத்தே நிமிடங்களில் பேச்சைமுடித்துவிட்டு இறங்கிவிட்டார்.

கடலூரில் பேச்சு:

கடலூர் அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதாபேசினார். எழுதி வைத்திருந்த உரையை ஜெயலலிதா படித்தார்.

அவர் கூறியதாவது:

100 கோடி இந்தியர்களை ஆளும் தகுதி யாருக்கு உள்ளது. அனுபவம் நிறைந்த வாஜ்பாய்க்கா, அரைவேக்காடு சோனியாவுக்கா?நீங்களே தீர்மானியுங்கள்.

காவிரிப் பிரச்சினையில் கருணாநிதி துரோகம் இழைத்து விட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2 மத்திய அமைச்சர்களைக்கொண்டிருந்தும் காவிரி நீரை தமிழகத்திற்குக் கொண்டு வரத் தவறி விட்டனர். தமிழகத்தின் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை.

தமிழக நலன் குறித்துக் கவலைப்படுவதை விட்டு விட்டு எனது அரசு கொண்டு வர முயன்ற பல நல்ல திட்டங்களை, நலத் திட்டங்களைநிறைவேற்ற விடாமல் தடுக்கும் முயற்சியில்தான் மத்தியில் இருந்த திமுக அமைச்சர்கள் மும்ரமாக ஈடுபட்டிருந்தனர்.

நாட்டில் நிலவும் தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை ஒடுக்க பாஜகவினால் மட்டுமே முடியும். அதுபோலவேதமிழகத்தில் உலவும் பிரிவினைவாதிகளை ஒடுக்க அதிமுகவினால் மட்டுமே முடியும். எனவே 40 தொகுதிகளிலும் மக்கள் அதிமுக,பாஜக வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

தனது அரசின் சாதனைகள் என்று எதையும் சொல்லி ஜெயலலிதா ஓட்டு கேட்கவேயில்லை.

கூட்டம் கூடாத பாண்டிச்சேரி:

முன்னதாக பாண்டிச்சேரியில் பாஜக வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்தை ஆதரித்தும் ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.

பின்னர் அண்ணா திடலில் நடந்த பொதுக் கூட்டத்துக்கு ஜெயலலிதா வந்தார். ஆனால், கூட்டம் இல்லாததால் பிரச்சாரவேனிலேயே உட்கார்ந்திருந்தார். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமாரும் அதிமுக நிர்வாகிகளும் அங்கும் இங்கும் ஓடினர்.மைதானத்துக்கு வெளியே இருந்தவர்களை உள்ளே வருமாறு மைக்கில் கெஞ்சினர்.

அதிமுகவினர் கையைப் பிடித்து இழுக்காத குறையாக வெளியே இருந்தவர்களை எல்லாம் மைதானத்துக்குள் தள்ளிக் கொண்டுவந்தனர். அப்படியும் பாதி மைதானம் காலியாகக் கிடந்தது. இதையடுத்து சிறிது நேரத்தில் மேடைக்கு வந்த ஜெயலலிதா, சேரில்கூட உட்காராமல் நேராகப் போய் மைக்கைப் பிடித்தார்.

சரியாக 10 நிமிடம் மட்டும் பேசிவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டார். பேச்சில் புதுவை முதல்வர் ரங்கசாமியை கடுமையாக சாடினார்ஜெயலலிதா. காவிரி விஷயத்தில் கருணாநிதியோடு சேர்ந்து கொண்டு தமிழகத்தின் நலனுக்கும் புதுவை மக்களுக்கும் துரோகம் செய்தவர்ரங்கசாமி என்றார். பின்னர் வழக்கம்போல் வாய்ச் சவடால் வைகோ, ஜாதி வெறியர் ராமதாஸ் என வழக்கமான பேச்சைரீ-பிளே செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+