எதிரியாய் மாறிய நண்பர் !
மயிலாடுதுறை:
கடந்த தேர்தலில் எனது வெற்றிக்காக வேலை பார்த்த ஓ.எஸ்.மணியன் இப்போது என்னை எதிர்த்துத் தேர்தலில்போட்டியிடுவதோடு மிகவும் அநாகரீகமாகவும் பேசி வருகிறார். அவருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்என்று மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.
மயிலாடுதுறையில் காங்கிரஸ் சார்பில் மணிசங்கர அய்யர் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஓ.எஸ். மணியன்போட்டியிடுகிறார். இவர் தான் சில மாதங்களுக்கு முன் மணிசங்கர அய்யரை ஆள் வைத்து நடு ரோட்டில்அடித்தவர். அதற்காகவே இவருக்கு சீட் தந்தார் முதல்வர் ஜெயலலிதா.
இப்போது மயிலாடுதுறையில் அய்யரும் மணியனும் மிகக் கடுமையாக பிரசாரம் செய்து வருகின்றனர்.இருப்பினும் ஓ.எஸ்.மணியனே பிரசாரத்தில் முன்னணியில் இருக்கிறார்.
இந் நிலையில் செய்தியாளர்களிடம் அய்யர் பேசுகையில், கடந்த தேர்தலின்போது எனது பிரசாரப் பணிகளைபார்க்கும் பொறுப்பில் இருந்தவர் மணியன். எனக்காக தீவிரமாக வேலை பார்த்தவர். எனது நண்பராக இருந்தவர்.இப்போது நிலைமை மாறி விட்டது.
என்னைப் பற்றி மிகவும் அநாகரீகமான முறையில் விமர்சனம் செய்கிறார் மணியன். அவதூறாகப் பேசி வருகிறார்.இதற்கு மயிலாடுதுறை மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications