குடிபோதையில் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய போலீசார் !
மதுரை:
மதுரை அருகே அருப்புக் கோட்டையில் குடிபோதையில் இருந்த காவலர்கள் தாக்கியதில், சப்-இன்ஸ்பெக்டர்காயமடைந்தார்.
அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ஏட்டையாவாக இருப்பவர் ராதா. காவலராக இருப்பவர் சரவணன்.இந்த இருவரும் நேற்று மதுரைக்கு அலுவலகரீதியாக வந்தனர். பின்னர் மது பாட்டிலை வாங்கிக் கொண்டு பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றனர்.
அங்கு வைத்து அவர்கள் மது அருந்த முயன்றனர். பட்டப் பகலில் பொதுமக்கள் வந்து செல்லும் ஹோட்டலில் மதுஅருந்த காவலர்கள் முயற்சிப்பதைப் பார்த்த ஹோட்டல் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். காவலர்களிடம்சென்று இங்கு மது அருந்தக் கூடாது என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இரு கேடு கெட்ட ஜென்மங்களும் ஹோட்டல் உரிமையாளரை தாறுமாறாகதிட்டிவிட்டு கொண்டு வந்த சரக்கை ராவாக உள்ளே தள்ள ஆரம்பித்தனர்.
இதையடுத்து ஹோட்டல் உரிமையாளர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு, சப் இன்ஸ்பெக்டர்ஜெயசீலனிடம் புகார் கொடுத்தார்.
ஜெயசீலன் உடனடியாக ஹோட்டலுக்கு விரைந்து வந்தார். குடிபோதையில் இருந்த இரண்டு காவலர்களையும்திட்டிய அவர் இருவரையும் ஜீப்பில் ஏறுமாறு உத்தரவிட்டார்.
ஆனால் அதற்குள் படு போதைக்குப் போய்விட்ட இரு காக்கிகளும் சப் இன்ஸ்பெக்டர் ஜெயசீலனை தாக்கத்தொடங்கினர். இதில் ஜெயசீலன் காயமடைந்தனர்.
இதையடுத்து ஹோட்டலுக்கு சாப்பிட வந்த பொது மக்கள் சண்டையைத் தடுத்து இரு தரப்பினரையும் விலக்கிவிட்டனர். அதன் பின்னர் கூடுதல் காவல்களை ஹோட்டலுக்கு வரவழைத்த ஜெயசீலன், அந்த இரண்டுஜென்மங்களையும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சென்றார்.
இந்த இருவர் மீதும் வழக்கு ஏதும் தொடரப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.