கல்லூரி பெண்கள் போல நடித்து போதை ஊசி போட்டு விபச்சாரம்: 6 பேர் கைது
சென்னை:
கல்லூரிப் பெண்களைப் போல நடித்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் மற்றும் புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பெண்கள் போதை ஊசியும் போட்டு செக்ஸ் லீலைகள் நடத்தி வந்துள்ளனர்.
கிண்டி பெண்கள் கல்லூரி அருகே சில அழகிகள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக புகார்கள் வந்ததையடுத்து விபசார தடுப்பு பிரிவுஉதவி கமிஷ்னர் ஆறுமுகசாமி, இன்ஸ்பெக்டர் மதி மற்றும் போலீசார் மாறு வேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்கு சில பெண்கள் கல்லூரி மாணவிகளைப் போல் உடை அணிந்து நின்றனர். போலீசார் வாடிக்கையாளர்கள் போல் சென்றுஅழகிகளுக்கு அருகே இருந்த புரோக்கர்களை அணுகினார்கள். ரூ. 2,000 முதல் ரூ. 10,000 ரூபாய் வரை ரேட்டில் பெண்கள்இருப்பதாக புரோக்கர்கள் தெரிவித்தனர்.
அழகிகளுடன் நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க கூடுதலாக 500 ரூபாய் கொடுத்தால் போதை ஊசியும் போடப்படும் என்றும்கூறியுள்ளனர். இதையடுத்து 6 விபசார அழகிகளையும், புரோக்கர்களையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. ராஜமுந்திரியைச் சேர்ந்தலெட்சுமி (வயது 21), விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த துர்கா (18), பத்மா (19), விஜயவாடாவைச் சேர்ந்த லதா (18),
மேற்கு கோதாவரியைச் சேர்ந்த பூரணம் (22), காக்கிநாடாவைச் சேர்ந்த சுவாதி (19) மற்றும் விபச்சார புரோக்கர்கள் ராஜு,ராஜேஷ், வெங்கடேஸ்வரராவ், ராம் மோகன், சுபத்ரா (75) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்களில் ராஜு என்பவர் புரோக்கர் தொழில் நடத்தியதற்காக ஏற்கனவே 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர். இந்த விபசார கும்பலின் தலைவன் பாம்பே நாகேஸ்வர ராவ் போலீசைப் பார்த்ததும் தப்பி ஓடி விட்டான்.
இவர்கள் வளசரவாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, காலையில் பெண்கள் கல்லூரிகளின் அருகே நின்று விபச்ாரத்துக்குஆண்களை அழைத்து வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து மாருதி கார் மற்றும் 18 போதை மருந்து ஊசி குப்பிகளை போலீசார்பறிமுதல் செய்தனர்.