மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
சென்னை:
நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பெல்லார்மினுக்கு எதிராகசென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாகர்கோவில் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மின், ஆறுமுகப் பெருமாள் என்பவரின் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந் நிலையில் ஆறுமுகப் பெருமாளின் மனைவிசெல்லத்தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், எனது கணவர் ஆறுமுகப் பெருமாள் கடந்த 1995ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக இரணியல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 7 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் கடைசி குற்றவாளியாகஅறிவிக்கப்பட்டுள்ளவர் பெல்லார்மின். தற்போது பெல்லார்மின் தேர்தலில் போட்டியிடவுள்ளதால், அவரை இந்தவழக்கிலிருந்து நீக்க போலீஸார் முயற்சிக்கிறார்கள்.
மேலும் வேண்டும் என்றே வழக்கையும் இழுத்துக் கொண்டு போகிறார்கள். கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வரும்வழக்கில், இதுவரை 2 முறை பெல்லார்மின் கைது செய்யப்பட்டார். ஆனால் ஒரு நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கு தொடர்பாக பெல்லார்மினைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கஉத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பெல்லார்மின் தாக்கல் செய்த பதில் மனுவில், மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவதைத்தடுக்கும் நோக்கத்துடன்தான் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து மனுவை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் டிஸ்மிஸ் செய்ய நேரிடும் என்று நீதிபதிஅசோக் குமார் தெரிவித்தார். இதையடுத்து செல்லத்தாயின் வழக்கறிஞர் மனுவை வாபஸ் பெற்றார்.












Click it and Unblock the Notifications