For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறு ஆய்வுக் குழுவின் தீர்ப்பு இறுதியானதல்ல: பாஜக

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

வைகோவின் மீதான பொடா வழக்கை வாபஸ் பெறுமாறு மறு ஆய்வுக் குழு தந்துள்ள தீர்ப்பு இறுதியானதல்லஎன்று பா.ஜ.க. கருத்து தெரிவித்துள்ளது.

திருச்சியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அக் கட்சியின் பொதுச் செயலாளர் இல.கணேசன்,

மதிமுக சார்பில் திருச்சியில் போட்டியிடும் எல்.கணேசனுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. அது மதிமுகவுக்குப்போடும் ஓட்டல்ல. விடுதலைப் புலிகளுக்குப் போடும் ஓட்டு.

வைகோ விஷயத்தில் பொடா மறு ஆய்வுக் குழு அளித்துள்ள தீர்ப்பு இறுதியானதல்ல. இதை ஆய்வுக் குழுவேமீண்டும் மறுபரிசீலனை செய்யலாம். நீதிமன்றத்தில் தீர்ப்பு மாறலாம்.

இந்த வழக்கில் விடுதலை கிடைத்துள்ளதால் தன் மீது ஜெயலலிதா போட்டது பொய் வழக்கு என்கிறார் வைகோ.அப்படியானால் திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளில் இருந்து ஜெயலலிதா விடுதலை ஆனார்.அப்படியானால் அவையும் பொய் வழக்குகள் தான் என்பதை வைகோ ஒத்துக் கொள்கிறாரா? என்றார்இல.கணேசன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X