அதிமுகவுக்கு எதிரான கூட்டணி தொடரும்: வைகோ
மதுரை:
அதிமுகவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணி, அடுத்து வரும் சட்டசபைத்தேர்தலிலும் தொடரும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் அதிமுக எதிர்ப்பு அலை பலமாக வீசிக்கொண்டுள்ளது. அதிமுக ஆட்சியினால் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் ஏதாவது ஒரு வகையில்பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது உருவாகியுள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியானது, அதிமுகவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளஅணி. இந்தக் கூட்டணி வரும் சட்டசபைத் தேர்தலிலும் தொடரும், அதில் எந்த மாற்றமும் இல்லை.
ரஜினி ரசிகர்கள் தங்களது ஆதரவை யாருக்கு வேண்டுமானாலும் தெரிவிக்கலாம், அது அவர்களது சுதந்திரம்.இருப்பினும் அவர்களது பாமக எதிர்ப்பால், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படமாட்டாது என்றார் வைகோ.