ரஜினி ரசிகர்களை அவமானப்படுத்திய பாண்டிச்சேரி அதிமுக
பாண்டிச்சேரி:
புதுவையில் நடந்த ஜெயலலிதாவின் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் ரஜினி ரசிகர்கள் அசிங்கப்படுத்தப்பட்டனர்.
பாண்டிச்சேரியில் பா.ம.க. போட்டியிடுவதால் அதை எதிர்த்துப் போட்டியிடும் பா.ஜ.கவை ஆதரிக்க ரஜினிரசிகர்கள் முடிவு செய்தனர். பா.ஜ.க. வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்துக்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டத்தில் பேசஜெயலலிதா வருகிறார் என்றவுடன் அக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்க முடிவெடுத்தனர்.
ஆனால், தமிழகத்தில் ரசிகர்களை அதிமுக மதிக்காத காரணத்தால் ஜெயலலிதாவை புறக்கணிக்கலாம் என ஒருபிரிவு ரசிகர்கள் முடிவு செய்து, அதன்படி அதிமுக கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால், இன்னொரு பிரிவினரோ நமது தலைவர் சத்ய நாராயண ராவ் உத்தரவிட்டுவிட்டா, இதனால் நாம்அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு தான் ஆக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு கிளம்பினர்.
ஆனால், ரஜினி ரசிகர்கள் பொதுக் கூட்டப் பகுதிக்குள் வரக் கூடாது என அதிமுக நிர்வாகிகள் திட்டவட்டமாகக்கூறி, அவர்களை அவமானப்படுத்தினர்.
அண்ணா திடலில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ரஜினி ரசிகர்கள் கொடிகளுடன் கிளம்பினர். மாநிலரசிகர் மன்றத் தலைவர் ரஜினி சங்கரும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கோரி அதிமுக நிர்வாகிகளைஅணுகினார்.
ஆனால், அம்மா கூட்டத்தில் தயவு செய்து நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம். ஜெயலலிதாவை சந்திப்பதுஎல்லாம் சாத்தியமில்லை. உங்களுடன் பேசுவதையோ, உங்களை ஊக்குவிப்பதையோ அம்மா விரும்பவில்லைஎன்று அதிமுக புதுவை நிர்வாகிகள் முகத்தில் அடித்தார் போல கூறிவிட்டனர்.
இதனால் அவமானமாக உணர்ந்த ரஜினி ரசிகர்கள் திரும்பிச் சென்றனர்.
ஜெ. கூட்டத்தில் விதிமீறலா?
இதற்கிடையே பாண்டிச்சேரியில் நடந்த ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது தேர்தல் நடத்தைவிதிமீறல் நடந்ததாக எதிர்க் கட்சிகள் கூறி வரும் புகாரை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் மறுத்துள்ளார்.
இக் கூட்டத்துக்குத் தந்த அனுமதியை பொதுப் பணித்துறை கடைசி நேரத்தில் ரத்து செய்தது. ஆனாலும்ஜெயலலிதாவின் கூட்டம் நடந்தது.
இந் நிலையில் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், பொதுப் பணித்துறையின் அனுமதி பெற்ற பின்புதான்பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் பொதுப்பணித்துறையின் அனுமதி ரத்தான செய்திஎங்களை வந்து சேரவில்லை என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications