பொடா தீர்ப்பு: அத்வானி, ஜெ. பதவி விலக நெடுமாறன் கோரிக்கை
பாண்டிச்சேரி:
பொடா மறு ஆய்வுக் குழுவின் தீர்ப்பை மதித்து முதல்வர் ஜெயலலிதாவும், துணைப் பிரதமர் அத்வானியும் உடனடியாக தங்களதுபதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வைகோ உள்ளிட்டவர்கள் மீதான வழக்கில் பூர்வாங்க ஆதாரம்இல்லை என்று பொடா மறு ஆய்வுக் குழு கூறியுள்ளது. இதனால் வழக்கைப் போட்ட ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமாசெய்ய வேண்டும்.
பொடா சட்டம் கொண்டு வரப்பட்டபோது, அதை எந்த மாநில அரசாவது தவறாக பயன்படுத்தினால், மத்திய அரசு தட்டிக்கேட்கும் என்று அத்வானி நாடாளுமன்றத்தில் முழங்கினார்.
ஆனால் ஜெயலலிதா அரசு செய்த இந்த மாபெரும் தவறை தட்டிக் கேட்காமல் அமைதி காக்கிறார். இதனால் இப்போதையதீர்ப்பை மதித்து அவரும் பதவி விலக வேண்டும்.
பொடா மறு ஆய்வுக் குழுவின் தீர்ப்பை அடிப்படையாக வைத்து தமிழக அரசு மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications