மலேசியாவில் சிக்கியுள்ள 67 தமிழர்கள்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை:
மலேசிய வேலைவாய்ப்பு நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு, பாஸ்போர்ட், விசாக்களை பறி கொடுத்து விட்டுப்பரிதவிக்கும் 67 தமிழக இளைஞர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் வாஜ்பாய்,வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்: மலேசியாவின் அந்தரேயா பகுதியில் உள்ள பிளக்ஸ்ட்ரானிக்ஸ் என்றநிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 67 இளைஞர்களிடம்தலா ரூ. 75,000 முதல் ரூ. 1 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளனர்.
இவர்களுக்கு மாதம் ரூ. 15,000 வரை சம்பளம் கிடைக்கும் எனவும் உறுதி கூறியுள்ளனர். ஆனால் மலேசியாசென்ற பின்னர் அவர்களை மிரட்டி, ரூ. 7000 சம்பளத்திற்கு வேலை செய்வதற்கு ஒப்புக் கொள்வதாக கூறிஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வைத்துள்ளனர்.
மேலும், மலேசியா சென்ற பின்னர் தமிழக இளைஞர்களின் பாஸ்போர்ட்டுகள், விசாக்கள் உள்ளிட்டவற்றைமலேசிய வேலை வாய்ப்பு நிறுவனம் பறித்துக் கொண்டு விட்டு, அவர்களை அடிப்படை வசதிகள் கூட இல்லாதஇடத்தில் தங்க வைத்துள்ளது.
அவர்களை மீட்டு, அவர்களுக்குரிய அடிப்படை வசதிகள், உரிய சம்பளம் ஆகியவை கிடைக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும். மேலும் அவர்களை கூடிய விரைவில் தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
போலியான வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் இதுபோன்றசம்பவங்களை எதிர்காலத்தில் தவிர்க்க முடியும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications