ஆங்கிலப் படங்களை எதிர்த்து மதுரை தியேட்டரில் குண்டு வெடிப்பு !
மதுரை:
மதுரையில் எப்போதுமே ஆங்கிலப் படங்களையே திரையிட்டு வரும் மாப்பிள்ளை விநாயகர்- மாணிக்கவிநாயகர் திரையரங்க வளாகத்தில் நேற்றிரவு குண்டு வெடித்தது.
மதுரை ஆரப்பாளையம் பைபாஸ் சாலையில், மாப்பிள்ளை விநாயகர், மாணிக்க விநாயகர் திரையரங்குகள்அடங்கிய வளாகம் உள்ளது. இந்த இரு திரையரங்குகளிலும் எப்போதும் ஆங்கிலப் படங்களே திரையிடப்படுவதுவழக்கம்.
மதுரையில் உள்ள சிறந்த திரையரங்குகளில் இவையும் ஒன்று. இந் நிலையில் நேற்று இரவு 10 மணிக் காட்சிக்காகதிரையரங்கில் டிக்கெட்டுகள் வினியோகம் தொடங்கியது. அப்போது ரசிகர்கள் நின்றிருந்த கவுண்டருக்கு அருகேஇருந்த காலி கிரவுண்டில் திடீரென்று குண்டு வெடித்தது.
இதனால் ரசிகர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். குண்டுவெடிப்பில் டிக்கெட் வுண்டரும், மேனேஜர் அறையின் முன்பக்கக் கண்ணாடிகளும் சேதமடைந்தன.
போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். எப்போதுமே ஆங்கிலப் படங்களாகப் போடுவதால்,தமிழ்ப் புத்தாண்டையொட்டி திரையரங்குக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த செயலில் ஏதாவது ஒருஅமைப்பினர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.