ஐ.நாவின் பாரம்பரிய சின்னமாகிறது ஊட்டி மலை ரயில்
உதகமண்டலம்:
புகழ் பெற்ற உதகமண்டலம் மலை ரயிலை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையின்யுனெஸ்கோ அமைப்பு முடிவு செய்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் வரை மலை ரயில் இயக்கப்பட்டுவருகிறது. பாரம்பரியம் மிக்க இந்த நீராவி என்ஜின் ரயில் மலைப் பாதையில் வளைந்து, நெளிந்து செல்லும்அழகே தனி.
ஊட்டிக்கு வருவோர் இந்த ரயில் மூலம் பயணம் செய்துதான் உதகமண்டலத்தை அடைய விரும்புவார்கள்.
புகழ் பெற்ற மலை ரயிலை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க தென்னக ரயில்வேயின் பாலக்காடு கோட்டம்நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக யுனெஸ்கோ அமைப்புக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதற்குயுனெஸ்கோவிடம் இருந்து சாதகமான பதில் வந்துள்ளது.
ஜூன் மாத வாக்கில், மலை ரயிலை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கும் உத்தரவை யுனெஸ்கோ வெளியிடும்என்று எதிர்பார்ப்பதாக பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர் சர்மா தெரிவித்தார்.
நிலக்கயால் இயக்கப்பட்டு வரும் ஊட்டி மலை ரயிலை, பர்னெஸ் ஆயில் மூலம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் சர்மா தெரிவித்தார். இதன்மூலம் கரும்புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.












Click it and Unblock the Notifications