எங்களுக்கும் அது வேணும்... புதிய நீதிக் கட்சி நச்சரிப்பு

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

புதிய நீதிக் கட்சியும் நதி நீர் இணைப்பு ஆதரவு தருகிறது, பாமகவையும், வன்முறையையும் எதிர்க்கிறது. எனவேஎங்களது கட்சிக்கும் ரஜினிகாந்த் ஆதரவு அளிக்க வேண்டும் என அக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம்கோரியுள்ளார்.

நடிகர் ரஜினியின் நிலை இவ்வாறு மாறியிருக்க வேண்டாம். யார் யார் ஆதரவு கேட்பது என்ற எல்லையேஇல்லாமல் சுப்பிரமணியம் சுவாமியில் ஆரம்பித்து, லெட்டர் பேட் வைத்திருக்கும் அனைத்துக் கட்சிகளும்எனக்கும் மிட்டாய் வேணும் என்ற அளவுக்கு சின்னப் பிள்ளைகள் மாதிரி ரஜினியின் ஆதரவைக் கோரிநச்சரிக்க ஆரம்பித்துள்ளன.

இந்த நச்சரிப்பு கோஷ்டியில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், ரஜினிஆதரவு தர வேண்டும் என்று அவர் கொஞ்சம் உரிமையுடன் கேட்டுள்ளார்.

வேலூரில் நிருபர்களைச் சந்தித்த அவர், நதி நீர் இணைப்புக்கு நாங்கள் ஆதரவு அளித்து வருகிறோம். இந்தக்கோரிக்கையை பல காலமாக எழுப்பி வருகிறோம்.

அதேபோல, பாமகவையும், வன்முறைச் செயல்களையும் நாங்கள் எப்போதும் எதிர்த்தே வந்துள்ளோம். எனவேரஜினியின் மனதுடன் நாங்களும் ஒத்துப் போகிறோம்.

இதனால் பாஜக போட்டியிடாத 33 தொகுதிகளில் எங்களது கட்சி வேட்பாளர்களை ரஜினி ஆதரிக்க வேண்டும்.விரைவில் நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கவுள்ளேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+