தமிழ்ப் புத்தாண்டு: அப்துல் கலாமின் வித்தியாசமான வாழ்த்து
டெல்லி:
தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஜனாதிபதி அப்துல் கலாம், முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர்கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
கலாம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இனிய தாரண வருடபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த இனிய நாளில் பெற்றோர்களுக்கு ஒரு செய்தியைக் கூறவிரும்புகிறேன்.
இளைய சமுதாயம் நற்பண்பைக் கற்கும் இடம் குடும்பம் தான். நற்பண்பு தான் நல்ல மனிதனைஉருவாக்குகிறது. இதனால் குழந்தைகளிடம் நல்ல பண்புகளை வளருங்கள். தன் சுய வளர்ச்சியோடு,நாட்டுக்கும் உழைக்கும் ஊக்கத்தைக் கொடுங்கள்.
இதனால் குழந்தைகளோடு சேர்ந்து நாடும் வளரும்.
உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். மக்கள் அனைவரும் எல்லாவளமும் பெற்று வாழ இந்த நாளில் வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் கலாம்.
அதே போல முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரும் வாழ்த்துச் செய்திகள்வெளியிட்டுள்ளனர்.