கருணா ஆதரவாளர்கள் ஊடுருவலை தடுக்க தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு
சென்னை:
இலங்கையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலையடுத்து படைகளைக் கலைத்துவிட்டு ஓடும் கருணாவின் ஆதரவுவீரர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவாமல் தடுக்க கடலோரப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கருணாவின் படையினர் தப்பி ஓடி வருகின்றனர். இதில் கருணாஇலங்கை ராணுவத்திடம் தஞ்சமடைந்துவிட்டதாகவும், அவர் ஹெலிகாப்டர் மூலம் கொழுப்புவுக்குக் கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் பரவிக் கிடக்கின்றன.
இந் நிலையில் தப்பியோடிய கருணாவின் ஆதரவாளர்களும் அடைக்கலம் தேடி தமிழகத்திற்குத் தப்பி வரும்வாய்ப்புக்கள் உள்ளதாக மத்திய அரசு கருதுகிறது. இதையடுத்து ராமேஸ்வரம் கடல் பகுதியில் ரோந்துப் பணியைகடற்படை தீவிரப்படுத்தியுள்ளது.
மேலும் ராமேஸ்வரம், பாம்பன், வேதாரண்யம், நாகப்பட்டனம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாரின்கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications