மே இரண்டாம் வாரத்தில் பிளஸ் டூ முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மே மாதம் இரண்டாவது வாரத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை வெளியிடும் வகையில் விடைத்தாள்களைத்திருத்தும் பணி வேகமாக நடந்த வருகிறது.
பிளஸ் டூ தேர்வுகள் கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 1,444மையங்களில் 5.13 லட்சம் மாணவ மாணவியர் எழுதினர். இப்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் வேகமாகநடைபெற்று வருகின்றன. மொழித் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு விட்டன.
கடைசியாக நடந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் தற்போது திருத்தப்பட்டு வருகின்றன. இந்த வாரத்துக்குள்இந்தப் பணிகள் முடிந்து விடும் என்றும், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மே மாதம் இரண்டாவதுவாரம் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படலாம் என்றும் கூறினர்.












Click it and Unblock the Notifications