வலம்புரி ஜான் திவால்!
சென்னை:
பல கட்சிகள் கண்டவரும், இலக்கியவாதியும், இந்த நாள் இனிய நாள் மூலம் மிகப்பிரபலமானவருமான வலம்புரிஜானும் அவரது மனைவி பானுவும் பொருளாதாரரீதியில் திவால்ஆனவர்கள் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதிமுக, காங்கிரஸ், திமுக என பல கட்சிகளுக்குத் தாவியவர் வலம்புரி ஜான். சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல், எழுத்துப்பணி என அனைத்திலிருந்தும் ஒதுங்கி இருக்கிறார்.
ஜானும் அவரது மனைவி பானுவும் அர்ஜூன் தாஸ் என்பவரிடம் ரூ. 12.28 லட்சம் கடன்வாங்கியிருந்தார். இதைத் திருப்பித் தராததால் வலம்புரி ஜான், பானு ஆகியோர் மீது வழக்குத்தொடர்ந்தார் அர்ஜூன் தாஸ்.
இதையடுத்து பணத்தைத் திருப்பித் தருமாறு வலம்புரி ஜானுக்கும் பானுவுக்கும் நீதிமன்றம்உத்தரவிட்டது. அப்படியும் பணத்தைத் தராததால், வலம்புரி ஜான், பானுவை திவால் ஆனவர்கள்என்று அறிவிக்கக் கோரி புதிய மனு தாக்கல் செய்தார் தாஸ்.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்த வலம்புரி ஜான், தன்னிடம் சொத்துக்கள் இருப்பதாகக்குறிப்பிட்டிருந்தார். இதனால் திவால் ஆனவர் என்ற அவப் பெயரில் இருந்து தப்ப முயன்றார்.
ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்குமார், வலம்புரி ஜானையும் பானுவையும் திவால்ஆனவர்கள் என்று அறிவித்தார். மேலும் அவர்களது சொத்துக்கள் குறித்து ஆராயவும், அவர்களதுநிதி பரிவர்த்தனைகள் குறித்து அறிக்கை தரவும் அதிகாரி ஒருவரை நியமித்தும் உத்தரவிட்டார்நீதிபதி.