25 தொகுதிகளில் 15 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: வாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 25 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 15 லட்சம் வாக்காளர்கள் முறைகேடாகநீக்கப்பட்டிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள 25 தொகுதிகளைச் சேர்ந்த 15லட்சம் வாக்காளர்கள முறைகேடான வகையில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவில்லாத தொகுதிகளில் ஆளுங்கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக இவ்வாறுசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின் தேர்தல்ஆணையத்தில் புகார் செய்யவுள்ளோம்.
நாளை முதல் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின்வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரசாரம் செய்யவுள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications