தேர்தல் ஆணைய எதிரொலி: சென்னைக்கு புதிய கலெக்டர் நியமனம்
சென்னை:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவையடுத்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்து வந்த கண்ணுச்சாமிமாற்றப்பட்டு அவருக்குப் பதில் ராஜாராம் புதிய ஆட்சித் தலைவராக பதவியேற்றுள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்து வந்தவர் கண்ணுச்சாமி. சென்னை மாவட்டத்தில் உள்ளசட்டசபைத் தொகுதிகள் அனைத்திலும் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக தேர்தல்ஆணையத்திற்கு எதிர்க்கட்சிகள் புகார் அனுப்பின.
இதையடுத்து வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் சரி பார்த்தது. இந் நிலையில் கண்ணுச்சாமியைஉடனடியாக இடமாற்றம் செய்யுமாறு மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி கண்ணுச்சாமி இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதில் ராஜாராம் புதிய ஆட்சித் தலைவராகநியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றே தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். ராஜாராம் இதற்கு முன் ஊரகவளர்ச்சித் துறை இயக்குநராக இருந்து வந்தார்.