ஏப்ரல் 21ல் மதுரை சித்திரைத் திருவிழா துவக்கம்
மதுரை:
உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா வரும் 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவிழாக்களுக்குப் பெயர் போன மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்றது சித்திரைத் திருவிழா. மீனாட்சி அம்மன்திருக் கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஆகிய முக்கிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது இந்த சித்திரைத்திருவிழா.
12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் சித்திரைத் திருவிழா வரும் 21ம் தேதி கொடியேற்றத்துடன்மதுரையில் தொடங்குகிறது.
29ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. மே 1ம் தேதி மீனாட்சி அம்மனுக்கும்,சொக்கநாதருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் மே 4ம் தேதி நடைபெறவுள்ளது.
சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மீனாட்சி அம்மன்திருக்கோவில் நிர்வாகம் தெவித்துள்ளது. வைகை ஆற்றில் தண்ணீரைத் தேக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன.
கடந்த ஆண்டு தண்ணீரே இல்லாத ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த முறை கொஞ்சமாவதுதண்ணீரை வைகைக்குக் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications